Kathir News
Begin typing your search above and press return to search.

100 நாள் வேலைத்திட்டம்: ரூ.2,999 கோடியை தமிழகத்திற்கு விடுவித்த மோடி அரசு!

100 நாள் வேலைத்திட்டம்: ரூ.2,999 கோடியை தமிழகத்திற்கு விடுவித்த மோடி அரசு!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 May 2025 7:16 PM IST

கிராமப்புறங்களில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். குறிப்பாக 100 நாள் வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இருந்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள், ஒரு ஆண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி செய்வதில் இத்திட்டம் பெரும் பங்கை வகித்தது.


இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட மூலம் இந்தியா முழுவதும் சுமார் 740 மாவட்டங்களில், 13.42 கோடி பேர் பயனாளிகளாக உள்ளனர். இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு, 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காமல் நிறுத்தி வைத்து உள்ளது என்று தமிழக அரசு குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் பார்லிமென்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஆர்ப்பாட்டமும் நடந்துது.

இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கான ரூ.2,999 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இந்த திட்டத்தில் நிலுவையில் இருந்த ரூ.4,034 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், ரூ.2,999 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News