102 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்; சிலைகளை அழித்து மசூதியாக மாற்றப்பட்ட கோவில் - பாகிஸ்தானில் நடந்த அக்கிரமம்!
102 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்; சிலைகளை அழித்து மசூதியாக மாற்றப்பட்ட கோவில் - பாகிஸ்தானில் நடந்த அக்கிரமம்!
By : Kathir Webdesk
பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக உருவெடுத்து 73 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதல் முறையாக ஒரு இந்துக் கோவில் கட்டப்படுவதாக செய்தி வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு அவர்கள் வழிபட்டு வந்த கோவிலும் மசூதியாக மாற்றப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
இந்து சிறுமிகள் அடிக்கொரு முறை கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு பாலியல் அடிமைகளாக வன்புண்ரவுக்கு உள்ளாக்கப்படும் அக்கிரமம் நடந்து வருகிறது. உலகெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த தருணத்தில் கூட பாகிஸ்தானிய இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களைக் கடத்தி மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு கூட இவ்வாறு கடத்தப்பட்ட ஒரு 14 வயது சிறுமியின் தாய் "இஸ்லாமிய நாடுகளில் பிறப்பதே சாபக்கேடு" என்று அழுது அரற்றிய வீடியோ வெளியானது.
இந்த அக்கிரமங்களை எதிர்த்து இந்தியா பல முறை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை அழைத்து கடும் கண்டனங்களைப் பதிவு செய்த போதும் இது வரை செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் பாகிஸ்தான் நடந்து கொள்கிறது. இந்த வரிசையில் தற்போது சிந்து மாகாணத்தின் பாதின் மாவட்டத்தில் உள்ள கொலார்ச்சி பகுதியில் 102 இந்துக்கள் கூண்டோடு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒருவர் விடாமல் 102 இந்துக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இத்தோடு நில்லாமல் அந்த பகுதியில் உள்ள இந்து கோவிலில் உள்ள கடவுள் சிலைகள் உடைக்கப்பட்டு கோவில் மசூதியாக மாற்றப்பட்டு விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் பீல் வகுப்பைச் சேர்ந்த ஒரு சிறுவன் கடத்தப்பட்டு அவனைத் திருப்பி அனுப்ப அவனது குடும்பத்தினரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் சொல்லி வற்புறுத்திய கொடுமை நிகழ்ந்தது. பீல் வகுப்பினரின் வீடுகளை சூறையாடி, நிலத்தை அபகரித்து, வீட்டிலிருந்து விரட்டி உறைவிடம் இல்லாமல் செய்து இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு மிரட்டியுள்ளனர். சிறுவனைக் கடத்தி விடுதலை செய்ய பிணையாக இந்துக்களை மதம் மாறச் சொன்னவர் தப்ளிகி ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியானது. இத்தனை கொடுமைகளுக்குப் பின்னும் கடத்தப்பட்ட சிறுவனின் தாய் "உயிரை வேண்டுமானாலும் விடுவோமே தவிர இஸ்லாம் மதத்துக்கு மாற மாட்டோம்" என்று வீராவேசத்துடன் பேசிய காட்சிகளும் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.