Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ தங்கம்.. சுங்கப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல்..

ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ தங்கம்.. சுங்கப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 May 2024 4:46 PM GMT

சென்னை விமான நிலைய சுங்கப் புலனாய்வுப் பிரிவு மூலம் ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில், 02.05.2024 அன்று ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜாவிலிருந்து வந்த இந்திய பெண் பயணி ஒருவர் விமான நிலைய சுங்கப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் சோதனையிடப் பட்டார்.


இந்த சோதனையின் போது ரப்பர் பசை வடிவிலான தங்கம் அவரது உடையில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1.07 கோடி மதிப்புள்ள 1.69 கிலோ 24 காரட் தூய தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு நபர்கள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து சுங்கப் பிரிவினர் சட்ட விரோதமாக தங்கத்தை கடத்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News