Kathir News
Begin typing your search above and press return to search.

ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி - இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி நேற்று தொடங்கியது இதில் இந்தியா உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன

ஜப்பானில் சர்வதேச கடற்படை பயிற்சி - இந்தியா உட்பட 12 நாடுகள் பங்கேற்பு

KarthigaBy : Karthiga

  |  7 Nov 2022 5:15 AM GMT

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் தோல்வியை தொடர்ந்து உருவாக்கப்பட்ட கடற்படையின் 70-வது ஆண்டு நினைவு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சர்வதேச கடற்படை பயிற்சிக்கு ஜப்பான் ஏற்பாடு செய்தது. தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே யோகோசுகாவில் உள்ள சுகாமி வளைகுடா பகுதியில் இந்த பயிற்சி நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறும் இந்த நிகழ்வில் இந்தியா அமெரிக்க ஆஸ்திரேலியா கனடா நியூசிலாந்து சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் பங்கேற்று உள்ளன. மேலும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக ஜப்பான் நடத்தும் இந்த சர்வதேச கடற் பயிற்சியில் தென்கொரியா முதல்முறையாக கலந்து கொண்டுள்ளது. போர்க்கால பாதிப்புகளால் மோசமாக இருந்து வந்த இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவுகள் மேம்பட தொடங்கி இருப்பதை இது வெளிப்படுத்தியுள்ளது. எனினும் இந்த பயிற்சியில் சீனா கலந்து கொள்ளவில்லை .


அதே நேரம் யோகா காமாவில் இன்றும் நாளையும் நடைபெறும் மேற்கு பசிபிக் பிராந்திய கடற்படை மாநாட்டில் சீனா கலந்து கொள்கிறது. இதில் சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் கடற்பகுதியில் நேற்று தொடங்கிய கடற்படை பயிற்சி பிரதமர் புமியோ கிஷிடா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கிழக்கு மற்றும் தெற்கு சீன கடல் பகுதியில் குறிப்பாக ஜப்பானை சுற்றிலும் பாதுகாப்பு சசூழல் மோசம் அடைந்து வருகிறது. அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணை வீச்சூகளும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆசியாவில் ஏற்படுத்தி வரும் தாக்கமும் கவலை அளிக்கிறது.சர்ச்சைகளை விலக்கி பேச்சு வார்த்தைகளை நடத்துவது முக்கியம். ஆனால் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருப்பதும் அவசியம் . இதற்காக ஜப்பானின் ராணுவ வலிமையை ஐந்து ஆண்டுகளுக்குள் அதிகரிப்போம். எங்களிடம் வீணாக்குவதற்கு நேரமில்லை. அதிக போர் கள்கள் கட்டுவதும் ஏவுகணை எதிர்ப்பு திறனை வலுப்படுத்துவதும் படைகளின் பணி திறமையை மேம்படுத்துவதும் அவசர தேவையாகும். இவ்வாறு புமியோ கிஷிடா கூறினார். முன்னதாக ஜப்பானின் இசுமோ போர்க்கப்பலில் சென்று சர்வதேச நாடுகளின் போர்க்கப்பல்களின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News