பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சிக்கிய 12 பேர் - கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன்
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 12 பேர் சிக்கி உள்ளனர் என்று கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்
By : Karthiga
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உட்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதனால் கோவை மாவட்டத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டது .தமிழக கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் கோவை வந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் கோவை மாநகரம் முழுவதும் அதிரடிப்படை, கமாண்டோ படையினர் உட்பட 3 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் டி.ஜி.பி தாமரைக்கண்ணன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறியதாவது கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .3 ஆயிரத்து 500 போலீசார் போதுமானது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 12 பேர் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.