Kathir News
Begin typing your search above and press return to search.

12ஆம் வகுப்பு தேர்வு : பத்திரிகையாளராக விரும்பும் முதலிடம் பிடித்த தையல்காரரின் மகள்.!

12ஆம் வகுப்பு தேர்வு : பத்திரிகையாளராக விரும்பும் முதலிடம் பிடித்த தையல்காரரின் மகள்.!

12ஆம் வகுப்பு தேர்வு : பத்திரிகையாளராக விரும்பும் முதலிடம் பிடித்த தையல்காரரின் மகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 7:28 AM GMT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வின் முடிவு வெளியாகியது. கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் போன்ற பிரிவுகள் கொண்ட இந்த தேர்வில் மாநில அளவில் நந்திதா ஹரிபால் என்கிற மாணவி முதல் இடம் பிடித்தார்.

இந்த மாணவியின் அப்பா தையல்காரர் மற்றும் அம்மா வீட்டு பணிப்பெண்ணாக இருக்கிறார். நந்திதாவுக்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரன் இருக்கின்றனர். தேர்வில் முதல் இடம் பிடித்ததை பற்றி அறிந்த நந்திதா பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களுடைய மகளுக்கு இனிப்பு கொடுத்து ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

தேர்வில் முதலிடம் எடுத்ததை பற்றி நந்திதா நிருபர்களிடம் பேசியது: தேர்வின் முடிவை அறிந்த உடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். மாநில அளவில் முதல் இடம் எடுப்பேன் என்பதை நான் நினைத்து பார்க்கவேயில்லை. மேலும், நான் பத்திரிகையாளராக ஆக வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு மாணவி நந்திதா ஹரிபால் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News