Begin typing your search above and press return to search.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை தொடரும் - தமிழக அரசு
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை தொடரும் - தமிழக அரசு
By : Kathir Webdesk
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும் என தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. இந்த குழுவின் ஆலோசனைகள் முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்கப்படும். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். எனவே அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
Next Story