Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் நேர்த்தியான திட்டங்களினால் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு - நிதி ஆயோக் தகவல்!

ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக நிதி ஆயோக் கூறியுள்ளது.

மோடி அரசின் நேர்த்தியான திட்டங்களினால் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு - நிதி ஆயோக் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  18 July 2023 7:15 AM GMT

'தேசிய பல பரிமாண வறுமை குறியீடு ஆய்வு முன்னேற்றம் 2023' என்ற அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி வெளியிட்டுள்ளார். 2015 - 2016 நிதியாண்டு முதல் 2020- 2021 நிதியாண்டு வரையிலான காலம் ஆய்வு காலம் ஆகும். 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் 77 மாவட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம், துப்புரவு, ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு, குடிநீர், மின்சாரம் உட்பட 12 அளவுகோல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிதி ஆயோக் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மேற்கண்ட கால கட்டத்தில் ஏழைகள் சதவீதம் 24.95 சதவீதத்தில் இருந்து 14.96 சதவீதமாக அதாவது 9.89 சதவீதம் குறைந்துள்ளது. ஏழைகளின் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சம் குறைந்துள்ளது. கிராமப்புற பகுதிகளில் 32.59 சதவீதத்திலிருந்து 19.28 சதவீதமாக வறுமை வேகமாக குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் 8.65 சதவீதத்திலிருந்து 5.27 சதவீதமாக சரிந்துள்ளது. வறுமையின் தீவிரம் 47 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாக குறைந்துள்ளது.

ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு, பள்ளி செல்லும் ஆண்டுகள், துப்புரவு ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் வறுமையை குறைப்பதில் கணிசமான பங்கு வகித்துள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை உத்திரபிரதேசம், பீஹார், மதியப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வறுமை வேகமாக குறைந்துள்ளது. இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News