Kathir News
Begin typing your search above and press return to search.

14 வயது மனநல வளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!

14 வயது மனநல வளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!

14 வயது மனநல வளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Sep 2019 8:09 AM GMT


திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் கடந்த 7 மாதங்களாகப் பாலியல் பலாத்காரம் செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


புலிவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் கூலி வேலை செய்து வருபவர்கள் பெற்றோர் வேலைக்கு செல்லும் போது தாத்தாவின் கண்காணிப்பில் சிறுமி இருந்துள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருந்தது தாய்க்கு தெரியவந்துள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் அருகில் இருக்கும் ஆராம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர் திருச்சி அரசு மருத்துவமணையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 6 மாதம் கர்ப்பம் என உறுதி செய்துள்ளனர்.


இதை அடுத்து காவல்துறைக்கும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தரப்பிலும் சிறுமியின் சித்தப்பா தரப்பிலும் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்று நியூஸ் 18 செய்தி தொகுப்பு தெரிவித்துள்ளது.


சிறுமியிடம் விசாரித்த காவல் துறை அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி கீழ சிந்தாமணியை சேர்ந்த பால்காரன் முத்து(வயது 57), பேரமங்கலத்தில் டீ கடை நடத்தி வரும் செல்வராஜ்(வயது 51), பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ராமராஜ்(வயது 45) மற்றும் பேரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இரண்டு முறை பொறுப்பு வகித்த தி.மு.க-வை சேர்ந்த செல்வராஜ்(வயது 49) ஆகிய 4 பேரும் சிறுமியை சீரழித்துள்ளனர்.


நான்கு பேரும் கடந்த 7 மாதங்களாக சிறுமியை சீரழித்து வந்துள்ளனர். இதனால், சிறுமி 6 மாதம் கர்பமாகி உள்ளார். இவர்களில் பேரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் என்பவர் தற்போது தி.மு.க ஊராட்சி மன்ற பகுதி பொறுப்பாளராகவும் தி.மு.க மாவட்ட விவசாய அணியிலும் பொறுப்பில் உள்ளார். நான்கு பேர் மீதும் போஸ்கோ(POSCO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவாகரத்தில் அவரது தாத்தாவிற்கும் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News