தன் காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாண நிச்சயதார்த்தம் - இது தான் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலைக்கு காரணமா?
தன் காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாண நிச்சயதார்த்தம் - இது தான் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலைக்கு காரணமா?
![தன் காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாண நிச்சயதார்த்தம் - இது தான் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலைக்கு காரணமா? தன் காதலிக்கு வேறு ஒருவருடன் கல்யாண நிச்சயதார்த்தம் - இது தான் நடிகர் சுஷாந்த்தின் தற்கொலைக்கு காரணமா?](https://kathir.news/static/c1e/client/83509/migrated/03c86a3db2d8e592d0b18efd94f7e0d8.jpg)
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆறு ஆண்டுகள் காதலித்து வந்த காதலிக்கு சில நாட்களுக்கு முன்னர் வேறு நபருடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுதான் அவருடைய தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் கூறப்படுகிறது.
எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்து சுஷாந்த் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார். இந்தப் படத்தில் முழுயான டோனி போலவே நடித்து இவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். சுஷாந்துக்கு 34 வயது ஆகிறது. இவர் மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரை உலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பல துறைகளில் இருப்பவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சுஷாந்த்தின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
சுஷாந்த்தின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு என்ன காரணம் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகர் சுஷாந்த் மற்றும் நடிகை அங்கிதா லோகண்டே என்பவரும் பாலிவுட் சீரியலில் ஒன்றாக நடித்துள்ளனர்.
இதன்மூலம் இவர்கள் இருவரும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மாறியது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் உண்டான கருத்து வேறுபாட்டால் கடந்த 2016ஆம் ஆண்டு அவர்களின் உறவை பிரித்துக்கொண்டு பிரேக்கப் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகைஅங்கிதாவுக்கு, விக்கி ஜெயின் என்ற நபருடன் கல்யாண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை அங்கீதா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு உள்ளார்.
இதனை தாங்கமுடியாமல் தான் சுஷாந்த் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என்ற சந்தேகங்கள் வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.