Kathir News
Begin typing your search above and press return to search.

1 மணி நேரத்தில் விற்று தீர்ந்த 1.5 லட்சம் 300 ரூபாய் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதியில் அலைமோதும் கூட்டம்

திருப்பதியில் வெளியான ஒரு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

1 மணி நேரத்தில் விற்று தீர்ந்த 1.5 லட்சம் 300 ரூபாய் ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகள் - திருப்பதியில் அலைமோதும் கூட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  22 May 2022 6:00 AM GMT

திருப்பதியில் வெளியான ஒரு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக வருவதால் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 9 மணிக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

மொத்தம் 63 நாட்களுக்கு 15.2 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன, தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். சிலர் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதியில் நேற்று முன் தினம் மட்டும் 71,119 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர், 37,256 பேர் முடி காணிக்கை செலுத்தினர். 3.94 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது என தேவஸ்தான அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News