Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கனில் 150 இந்தியர்கள் கடத்தல்? மறுத்த தாலிபான்கள்!

விமான நிலையம் முழுவதும் அமெரிக்க ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக அமெரிக்க ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

ஆப்கனில் 150 இந்தியர்கள் கடத்தல்? மறுத்த தாலிபான்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  21 Aug 2021 8:51 AM GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நாடு திரும்ப காத்திருந்த 150 பேரை தாலிபான் பயங்கரவாதிகள் கடத்தி சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ஆப்கானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்த பின்னர், அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பியோடி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்திற்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

விமான நிலையம் முழுவதும் அமெரிக்க ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஒவ்வொருவரையும் பாதுகாப்பாக அமெரிக்க ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தாலிபான் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும், அவர்களில் பெரும்பாலான மக்கள் இந்தியர்கள் எனவும் அந்நாட்டு தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் இது பற்றி உறுதியான தகவல் இல்லை. இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இது பற்றி தாலிபான் செய்தி தொடர்பாளர் அகமதுல்லா வாஸிக், 150 பேர் கடத்தப்பட்டதை மறுத்துள்ளார். இது குறித்து தி நியூயார்க் டைம்ஸ் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2827885

Next Story
கதிர் தொகுப்பு
Trending News