Begin typing your search above and press return to search.
மீண்டும் ஒன்றிணையும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.!
மீண்டும் ஒன்றிணையும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.!
By : Kathir Webdesk
இயக்குனர் சுந்தர் சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலு கூட்டணியில் வெளிவந்த அனைத்து படத்தின் காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும். சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமான தலைநகர் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரம் இன்று வரை பெரிய அளவில் சிறந்த காமெடியாக வளம் வருகிறது. இதனை தொடர்ந்து நகரம் படத்தில் இருவரின் கூட்டணி மிகப் பெரிய வெற்றி கிடைத்தது.
தற்போது தலைநகர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர்.சி மற்றும் காமெடி நடிகர் வடிவேலும் ஒன்றிணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளிவருகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் தலைநகர் படத்தின் இரண்டாம் பாகத்தை கதையை எழுதி முடித்துவிட்டார்களாம். இதனை இருட்டு படத்தை இயக்கிய வி.இசெட்.துரை இயக்க உள்ளாராம். இதனை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளி வரும் என கூறப்படுகிறது.
Next Story