Kathir News
Begin typing your search above and press return to search.

எம்.எஸ் டோனி ஒரு சிறப்பான மனிதர் - ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி.!

எம்.எஸ் டோனி ஒரு சிறப்பான மனிதர் - ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி.!

எம்.எஸ் டோனி ஒரு சிறப்பான மனிதர் - ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 11:07 AM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் டோனி சிறப்பான மனிதர் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி புகழ்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதி போட்டிக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் எம்எஸ் டோனி விளையாடவில்லை. இதனை தொடர்ந்து அவர் விரைவில் ஓய்வு பெறுவார் என பல கருத்துக்கள் வெளிவந்தது. ஆனால், ரசிகர்கள் ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி பார்ப்பதற்கு காத்திருந்தனர். கொரோனா வைரஸ் காரணத்தால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது எம்எஸ் டோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கருத்துக்களையும் மற்றும் அவருடன் ஏற்பட்ட நிகழ்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த வீரருமான முகமது நபி தி இந்தியன் எக்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்து. அதில் டோனியுடனான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.


எம்எஸ் டோனி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். முக்கியமாக அவர் ஒரு சிறந்த மனிதர். எம்எஸ் டோனி தங்கும் அறையின் கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் யார் எப்போது வேண்டுமென்றால் சென்று அவரை பார்க்கலாம். நான் அவரை இரண்டு அல்லது மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசி உள்ளேன். உண்மையாகவே ஒரு சிறந்த மனிதர் என முகமது நபி தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News