Kathir News
Begin typing your search above and press return to search.

எம்எஸ் டோனியும் ரோகித் சர்மாவும் அமைதி; கோலி ஆக்ரோஷம் - பார்த்தீவ் பட்டேல்.!

எம்எஸ் டோனியும் ரோகித் சர்மாவும் அமைதி; கோலி ஆக்ரோஷம் - பார்த்தீவ் பட்டேல்.!

எம்எஸ் டோனியும் ரோகித் சர்மாவும் அமைதி; கோலி ஆக்ரோஷம் - பார்த்தீவ் பட்டேல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 1:37 AM GMT

எம்எஸ் டோனி மற்றும் ரோஹித் சர்மாவின் ஓய்வு அறைகள் அமைதியாக இருக்கும். ஆனால் விராட் கோலியின் அறையை அப்படி இருக்காது என இந்திய வீரர்கள் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல். இவர் சிறிய வயதிலேயே இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி உள்ளார். பின்னர் எம்எஸ் டோனி வந்த பிறகு இவருக்கு பெரிய அளவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இவருக்கு ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்புகள் கிடைத்து கொண்டே இருந்தது. இவர் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார்.

தற்போது பார்த்தீவ் பட்டேல் கூறியது: விராட் கோலியின் தலைமை வித்யாசமாக இருக்கும். அவர் அனைத்தையும் முன்னிலையில் இருந்து செயல்பட எதிர்பார்ப்பவர். எப்பொழுதும் ஆக்ரோஷமாக செயல்ப்படுவர். ஆனால், எம்எஸ் டோனியும், ரோஹித் சர்மாவும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் இருவரும் மிக அமைதியானவர்கள். அதற்கு எதிரானவர் தான் விராட் கோலி.


எம்.எஸ் டோனி வீரர்களைப் பற்றி தெரிந்து கொள்வார். அவர்களுடைய திறமைகளை பற்றி அறிந்து கொள்வார். ரோகித் சர்மா திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர். மும்பை இந்தியன்ஸ் அணியை எப்பிடி வழிநடத்துகிறார் என்பது நமக்கு தெரியும். எந்த சமயத்தில் வீரர்களை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை டோனியும் ரோகித் சர்மாவும் நங்கு அறிந்து கொண்டவர்கள் என தெரிவித்தார். pa

Next Story
கதிர் தொகுப்பு
Trending News