Kathir News
Begin typing your search above and press return to search.

தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு - பரபரப்பில் மும்பை.!

தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு - பரபரப்பில் மும்பை.!

தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு - பரபரப்பில் மும்பை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Jun 2020 8:08 AM GMT

மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஒரு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளன்.இதனை அடுத்து அந்த ஓட்டலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 12 மணியளவில் தொலைபேசியில் பேசிய மர்ம நபர்; பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பங்கு சந்தையில் தீவிர தாக்குதல் நடைபெற்று வந்த சமயத்தில், 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தாஜ் ஓட்டலில் நடைபெற்ற தாக்குதலைப் போல் மீண்டும் நடைபெறும் என பேசிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளான். இதனை தொடர்ந்து தாஜ் ஓட்டல் முழுவதும் தீவிர பாதுகாப்பு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த மர்ம நபர் பாகிஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் பெரும் தாக்குதல் நடத்தினர். அதில் வெளிநாட்டை சேர்ந்த 28 பேர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். பின்பு 300 பேருக்கும் மேல் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை கூறி மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News