Kathir News
Begin typing your search above and press return to search.

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க செயலர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்..

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தி.மு.க செயலர்.. போக்சோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீஸ்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Jun 2024 3:54 PM GMT

திருச்சி மாவட்டத்தில் துறையூர் அருகேயுள்ள பெரமங்கலம் மணியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவருடைய நண்பர் கண்ணன் கூலித் தொழிலாளர். ராஜ்குமார், அதே பகுதியின் திமுக கிளைச் செயலராக இருக்கிறார். இவர்கள் இருவரும் இரு மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்தனர். அது மட்டும் கிடையாது. இருவரும் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக சிறுமியிடம் இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, அப்படி சொன்னால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.


இந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு, டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர், இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அவரிடம் பெற்றோர் விசாரித்ததில், ராஜ்குமாரும், கண்ணனும் தன்னை பலாத்காரம் செய்ததை சிறுமி கூறினார்.

புகாரின்படி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், நேற்று முன்தினம் காலை ராஜ்குமாரையும், கண்ணனையும் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்த ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News