Kathir News
Begin typing your search above and press return to search.

"1962ல் என்ன நடந்தது என்று நினைவில் கொள்ளுங்கள்" ராகுல் காந்தியை விளாசித் தள்ளிய சரத் பவார்.! #NCP #Congress #RahulGandhi #ChinaIndiaClash

"1962ல் என்ன நடந்தது என்று நினைவில் கொள்ளுங்கள்" ராகுல் காந்தியை விளாசித் தள்ளிய சரத் பவார்.! #NCP #Congress #RahulGandhi #ChinaIndiaClash

1962ல் என்ன நடந்தது என்று நினைவில் கொள்ளுங்கள் ராகுல் காந்தியை விளாசித் தள்ளிய சரத் பவார்.! #NCP #Congress #RahulGandhi #ChinaIndiaClash

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 1:45 PM GMT

சனிக்கிழமையன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் சரத் பவார், ராகுல் காந்தி சீனாவுடனான எல்லை தகராறு குறித்து பேசிய விஷயங்களுக்கு கண்டனம் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு விஷயங்களை அரசியல்மயமாக்கக் கூடாது என்றும், 1962 ஆம் ஆண்டு யுத்தத்தில் இந்தியாவுக்கு சொந்தமான நிலங்களை சீனா அபகரித்த போது என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

சீனப் படைகளுக்கு எதிராக மத்திய அரசு சரணடைந்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பவாரின் அறிக்கை இருந்தது. கால்வான் பள்ளத்தாக்கில் வன்முறை மோதல்கள் நடந்ததிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை கேலி செய்து வருகிறது. லடாக்கில் சீனா இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதா இல்லையா என்பதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது.

இருப்பினும், இது தொடர்பாக பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டதோடு, இந்திய பிராந்தியத்தில் சீன படையெடுப்பு எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். இது குறித்து, , சதாராவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷரத் பவார் ,"1962 ல் சீனா இந்தியாவின் 45,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை ஆக்கிரமித்தபோது என்ன நடந்தது என்பதை நாம் மறக்க முடியாது. இந்த குற்றச்சாட்டுகளை கூறும்போது, ​​கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதையும் ஒருவர் கவனிக்க வேண்டும். இது தேசிய நலனுக்கான பிரச்சினை, இங்கு அரசியலைக் கொண்டுவரக்கூடாது. "

அக்சாய் சின் பகுதியைப் பற்றி பேசிய ஷரத் பவார், கால்வான் பள்ளத்தாக்கின் நிலைப்பாட்டிற்கு மத்திய அரசை குறை கூற முடியாது என்றும் கூறினார். "சீன வீரர்கள், இந்திய மண்ணை ஆக்கிரமிக்க முயன்றபோது அவர்களை பின்னுக்குத் தள்ள முயன்றனர். இது பாதுகாப்பு அமைச்சரின் தோல்வி என்று சொல்வது சரியானதல்ல. நம் இராணுவம் விழிப்புடன் இல்லாதிருந்தால், சீனா ஆக்கிரமைப்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம். " என்றார்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தையும் சரத் பவார் குறிப்பிட்டுள்ளார், இது இரு நாடுகளும் LAC மீது எந்த துப்பாக்கிகளையும் பயன்படுத்தாது என்று கூறுகிறது என்று குறிப்பிட்டார்.

கால்வான் பள்ளத்தாக்கில் வன்முறை மோதலின் போது 2020 ஜூன் 15 அன்று 20 இந்திய ராணுவ வீரர்கள் தேச சேவையில் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இருந்து ராகுல் காந்தி அதற்கு அரசியல் கோணத்தை கொடுக்க முயற்சித்து வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News