Kathir News
Begin typing your search above and press return to search.

2 லட்ச ரூபாய் பெற்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு பள்ளி! முயற்சி எடுக்காத அரசு!

2 லட்ச ரூபாய் பெற்றும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு பள்ளி! முயற்சி எடுக்காத அரசு!

SushmithaBy : Sushmitha

  |  25 Nov 2023 2:25 AM GMT

பள்ளியின் தரம் உயர்த்த கிராமத்து சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்புத் தொகை பள்ளிக் கல்வித்துறைக்கும் வழங்கப்படும் பத்தாண்டுகள் கடந்து பள்ளியின் தரம் உயராத நிலை!!


தர்மபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டா நூல அள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி, 2002 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நூல அள்ளி, உழவன் கொட்டாய், சின்ன நூல அள்ளி, சவுளூர், திருமலைக்கவுண்டன் கொட்டாய் உள்ளிட்ட 11 கிராம பகுதிகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்கள் இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 400 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். ஆனால் இப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்கள் மேல்நிலைக் கல்வியை தொடர்வதற்கு வெளியூருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு வருவதால் இந்த உயர் நிலை அரசு பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


இந்த கோரிக்கையை ஏற்ற பள்ளி கல்வித்துறை பள்ளியின் தரம் உயர்த்த கிராம மக்கள் சார்பில் 2 லட்சம் ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனையும் ஏற்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து 2 லட்சம் ரூபாயை திரட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி வைப்பு தொகையாக செலுத்தியது. இந்த நிலையில் இந்த பணம் செலுத்தப்பட்டு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை இந்த பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாமல் உள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பத்து ஆண்டுகளாக பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படாமலும் கோரிக்கை நிலுவையில் விடப்பட்டுள்ளது!!

Source : The Hindu Tamilthisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News