2024 ஆண்டில் இஸ்ரோவின் திட்டம் இதுவா? உலக நாடுகளை அசரவைக்கும் திட்டங்கள்!
By : Sushmitha
மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்ய சபாவில் நேற்று நடைபெற்ற கூட்டத் தொடரில் பேசியவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தனது சமீபத்திய ஏவுகணை வாகனமான எஸ் எஸ் எல் வி யின் மூன்றாவது மேம்பாட்டு பயணத்தின் போது ஒரு தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோளை நிலை நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் விண்வெளி நிறுவனம் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக "இரண்டு ஆள் இல்லா" பயணங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளது அதன் உண்மையான விமானத்தின் போது மனிதனால் மதிப்பிடப்பட்ட ஏவுகணை வாகனம் மற்றும் சுற்றுப்பாதை தொகுதியின் செயல் திறனை சரி பார்க்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்து தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்திய விண்வெளி நிறுவனம் இரண்டு சுய ஆளுமை ஓடுபாதையில் தரை இறங்கும் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. மேலும் ஆறு பயணங்களை கொண்ட பல்வேறு கோள்கள் மற்றும் பயணங்களை வரவிருக்கும் பி எஸ் எல் வி யில் ஏவுவதாகவும், இதற்கு கூடுதலாக என் எஸ் ஐ எல் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் இரண்டு தொழில்நுட்ப விளக்க பணிகள் மற்றும் இரண்டு வணிக பணிகளும் இருக்கும் என கூறினார்.
ஆதாரம்: சுயராஜ்யம்