Kathir News
Begin typing your search above and press return to search.

2026 மார்ச் 31க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியா: நக்சலைட்டுகளுக்கு அமித்ஷா விடுத்த எச்சரிக்கை!

2026 மார்ச் 31க்குள் நக்சலிசம் இல்லாத இந்தியா: நக்சலைட்டுகளுக்கு அமித்ஷா விடுத்த எச்சரிக்கை!
X

SushmithaBy : Sushmitha

  |  18 April 2025 9:33 PM IST

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நக்சனைகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார்

அதாவது சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நடந்த பல நடவடிக்கைகளில் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் 22 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் சுக்மாவின் படேசெட்டி பஞ்சாயத்தில் 11 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் இதன் மூலம் இந்த பஞ்சாயத்தில் நக்சலைட் இல்லாததாக மாறி உள்ளது

இதனை தொடர்ந்து மேலும் 22 நக்சலைட்டுகள் சரணடைந்ததை அடுத்து மொத்தம் 33 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் தொடர்ந்து நக்சலைட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க போராடும் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் சத்தீஸ்கர் போலிசாரை நான் வாழ்த்துகிறேன் அதுமட்டுமின்றி மறைந்திருக்கும் நக்சலைட்டுகள் மத்திய அரசின் சரணடைதல் கொள்கையை ஏற்று கூடிய விரைவில் ஆயுதங்களை விடுத்து தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் 2026 மார்ச் 31ஆம் தேதிக்கு முன்பு நக்சலிசத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது உறுதியாக இருக்கிறோம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News