Kathir News
Begin typing your search above and press return to search.

25 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக்குவோம் - ஒடிசாவில் சூளுரைத்த பிரதமர்..!

25 லட்சம் பெண்களை லட்சாதிபதிகளாக்குவோம் - ஒடிசாவில் சூளுரைத்த பிரதமர்..!
X

SushmithaBy : Sushmitha

  |  6 May 2024 10:02 PM IST

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதன்படி ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரமானது தீவிரம் அடைந்து வருகிற நிலையில் இரண்டு நாள் பயணமாக ஒடிசா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு பிரதமரை காண கூடியிருந்த மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போடப்பட்டிருந்த பந்தல் நிழலில் திரண்டிருந்தனர், ஹெலிகாப்டரில் பிரதமர் பிரச்சார திடலுக்கு வந்த உடனே அவரை உற்சாகமாக கைகளை அசைத்து மக்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசிய பிரதமர், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது. மேலும் ஒடிசாவில் உள்ள சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25 லட்சம் பெண்களை ஒடிசா பாஜக அரசு லட்சாதிபதிகளாக்க உறுதிப்பூண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News