Kathir News
Begin typing your search above and press return to search.

ஜுன் 25, 1975: இந்திய ஜனநாயத்தின் கருப்பு தினம் - உண்மையில் 'பத்திரிகைத் தணிக்கை' என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.!

ஜுன் 25, 1975: இந்திய ஜனநாயத்தின் கருப்பு தினம் - உண்மையில் 'பத்திரிகைத் தணிக்கை' என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.!

ஜுன் 25, 1975: இந்திய ஜனநாயத்தின் கருப்பு தினம் - உண்மையில் பத்திரிகைத் தணிக்கை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 10:39 AM GMT

கடந்த ஆறு ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை அவசர நிலை (Emergency) காலத்துடன் ஒப்பிடுவது எதிர்க்கட்சிகளின் வாடிக்கை. இதை சொல்வது பெரும்பாலும் காங்கிரஸ் என்பது வேடிக்கை. ஜூன் 25, 1975ல் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்திரா காந்தி நம் நாட்டில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்.

நரேந்திர மோடியின் மற்றும் அவரது அரசாங்கத்தின் சாதனைகள் மற்றும் தோல்விகள் எதுவாக இருந்தாலும், அதை அவசரநிலையுடன் ஒப்பிடுவது 1975 மற்றும் 1977 க்கு இடையிலான உண்மையான அவசரகாலத்தின் போது ஒரு கொடுங்கோல் அரசாங்கத்துக்கு எதிராக ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர்களுக்கும், அதிகப்படியான பாதிப்புக்குள்ளானவர்களுக்கும் ஒரு அவமானமாகும்.

நிலையான விழிப்புணர்வு என்பது சுதந்திரத்தின் விலை, ஆனால் வேறு எந்த பிரதமரின் பதவிக்காலத்தையும் இந்திரா காந்தியின் அவசரநிலையுடன் ஒப்பிடுவது 1975-77 க்கு இடையில் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நாட்களில் உண்மையான பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் செய்யும் அவமதிப்பைக் காட்டுகிறது.

உண்மையான எமர்ஜென்சி எப்படி இருந்தது என்பதை அறியவும், சில பத்திரிகையாளர்கள் எவ்வாறு போராடினார்கள், மேலும் சிலர் 'வளையும் படிக் கேட்ட போது எப்படித் தவழ்ந்தார்கள்' என்பதைப் படியுங்கள்.





பெரும்பாலான தமிழர்களுக்கு, அவசரநிலை மற்றும் 'பத்திரிகை சுதந்திரம்' பற்றிய பேச்சு, அந்தக் காலத்தின் துன்பங்களை கடந்து வந்த தமிழ் இதழான துக்ளக்கின் நினைவுகளை மனதில் கொண்டு வருகிறது. நடிகர்-அரசியல் நையாண்டி விமர்சகர் 'சோ' ராமசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டது அப்பத்திரிகை. அவர் ஒரு தொழில்முறை பத்திரிகையாளர் அல்ல, மாறாக தற்செயலாக பத்திரிகையாளர் ஆனவர். 'அவசரநிலை' அறிவிக்கப்பட்டபோது, ​​பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வெளிவரும் அந்தப் பத்திரிகை வெறுமனே ஒரு கருப்பு அட்டைப் படத்தைக் கொண்டு வெளிவந்தது.



சோ, திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசாங்கத்தின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக அறியப்பட்டார். இருப்பினும், 'அவசரநிலை' அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட பத்திரிகையின் முதல் இதழில் சோ இவ்வாறு எழுதினார்:

"பத்திரிகை தணிக்கை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மத்திய அரசை விமர்சிப்பதற்கான உரிமைகளை இது பறிக்கிறது ஆனால், ​​மாநில திமுக அரசாங்கத்தை விமர்சிக்க இது (பத்திரிக்கை தணிக்கை) அனுமதிக்கிறது, இது பக்கா பாசாங்குத்தனம்(naked double standard) எனவே பத்திரிகை தணிக்கை நடைபெறும் வரை திமுகவை விமர்சிக்க மாட்டேன் என்று சபதம் செய்கிறேன்."

1975 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது 'பத்திரிகை சுதந்திரம்' எவ்வாறு சரியாக இயங்கியது என்பதை பத்திரிகையின் உள்ளடக்கம் மற்றும் அடுத்தடுத்த பிரச்சினைகள் பற்றிய ஆய்வு வெளிப்படுத்துகின்றன. ஜூலை 15, 1975 தேதியிட்ட துக்ளக்கில் வெளியான ஒரு பொதுவான அரசியல் அறிக்கை இங்கே:

"தலைப்பு:' 27-6-1975 அன்று திமுக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன "

'மேற்கண்ட தலைப்பை வெளியிட பத்திரிகை தணிக்கை அதிகாரி அனுமதி அளித்திருந்தாலும், மேற்கண்ட தலைப்புக்கு அடுத்தபடியாக உள்ளடக்கத்தை வெளியிட அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி அளித்தார்களா இல்லையா என்பதைக் கூற எங்களுக்கு அனுமதி இல்லை."

தமிழ்நாட்டில் துக்ளக் எதிர்கொண்டிருந்த தனித்துவமான போரை சோ கிண்டலுடன் (sarcasm) போராடினார்.

சோ எழுதிய தலையங்கம், 'அன்புள்ள மிஸ்டர் வாசகர்!'



பத்திரிகை சுதந்திரத்தின் மீதான முதல் தாக்குதல் சுவாரஸ்யமாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்துடன் (RSS) தொடர்புடைய ஒரு பத்திரிகை. இதன் விளைவாக, டெல்லியில் கைது செய்யப்பட்ட முதல் நபர் மதர்லேண்ட் செய்தித்தாளின் ஆசிரியர் கே ஆர் ​​மல்கானி ஆவார்.

1975 ஆம் ஆண்டு ஜூன் 25-26 இரவு மின்சாரம் செயலிழந்தது, இது பெரும்பாலான செய்தித்தாள்களை மறுநாள் காலையில் வெளியிடுவதைத் தடுத்தது. நூற்றுக்கணக்கான கைதுகள் குறித்த தனது அறிக்கையுடன் தாய்நாடு வெளிவந்தது. தலைநகரில் உள்ள பெரும்பாலான செய்தித்தாள்கள் சத்தமில்லாமல் மீண்டும் வெளியீட்டைத் தொடங்கின. "ஆனால் தாய்நாடு தொடங்கவில்லை" என்று நியூயார்க் டைம்ஸின் எரிக் பேஸ் செய்தி வெளியிட்டார், ஏனெனில் தாய்நாடு "ஒடுக்குமுறை தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் அரசாங்கம் விரைந்து செயல்படுத்திய தணிக்கை மற்றும் பத்திரிகை வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க மறுத்ததால் அரசாங்கத்தால் மூடப்பட்டது, ".

மினூ மசானி மற்றும் ஒய் டி லோகுர்கர் போன்ற பிரபல பத்திரிகையாளர்கள் பத்திரிகை சுதந்திரத்திற்காக துணிச்சலான சட்டப் போர்களை நடத்தினர். இதற்கிடையில், அண்டர்கரௌண்ட் பத்திரிகைகள் RSSன் தன்னார்வ தொண்டர்களின் நாடு தழுவிய நெட்வொர்க்கால் நடத்தப்பட்டது. அண்டர்கரௌண்ட் பத்திரிகைகளை இயக்கும் ஒரே 'குற்றத்தை' செய்ததற்காக 7,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர், மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை அங்கு கைப்பற்றப்பட்ட அச்சு சுருள்களை அவர்கள் தொடைகளுக்கு மேல் இயக்கி அவர்களின் தசைகளை நசுக்குவது.

இருப்பினும், அனைவரும் அந்தளவு தைரியமானவர்கள் அல்ல. பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா ஆகிய இரு நிறுவனங்களின் செய்திகளைப் பயன்படுத்த பெரும்பாலான ஆசிரியர்கள் சாந்தமாக இணங்கினர், ஏனெனில் "அந்த அமைப்புகளின் அலுவலகங்களில் தணிக்கையாளர்கள் அமர்ந்து அனுப்பப்பட்டதற்கு ஒப்புதல் அளித்தனர்". தங்களது தலையங்கங்களை தணிக்கையாளர்களுக்கு சமர்ப்பிப்பதைத் தவிர்க்க முயன்ற ஆசிரியர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைக் கவனித்து, 'பாதிப்பில்லாத செய்திகள்' குறித்து எழுதினர். அடக்கமான பத்திரிகைகள் 'தவழ்ந்து' வந்து, அவசரநிலை மற்றும் இந்திரா காந்தி மட்டுமல்ல, அப்போதைய இளவரசர் சஞ்சய் காந்தியின் சிறப்பையும் பாடின. இங்கே ஒரு மாதிரி:

குறிப்பிடத்தக்க மகிழ்ச்சியுடன், சஞ்சய் காந்தி இன்று சிறகு விரித்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் குதித்துள்ளார். இயல்பாகவே வரும் அரசியல் தலைமைத்துவ நிலையில் இருக்கிறார். (இந்தியா டுடே, செப்டம்பர்.1-15, 1976)

வினோத் மேத்தா போன்ற ஊடகவியலாளர்கள் தணிக்கைக்கு தணிக்கை செய்து, தங்கள் உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு முன்பு கமிஷனுக்கு அனுப்பினர். உள்ளடக்கங்கள் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட்டன. அப்போது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியாவின் ஆசிரியராக இருந்த குஷ்வந்த் சிங்கும் அவசரநிலைக்கு ஆதரவளித்தார். ஒரு கட்டுரைக்கு அவருக்கு முன் தணிக்கை வழங்கப்பட்டபோது, ​​இந்திரா காந்தியின் பத்திரிகை ஆலோசகரான ஷரதா பிரசாத்திற்கு கடமையாக போன் செய்து தன்னைக் காப்பாற்றினார். புண்படுத்தும் கட்டுரை தனது பத்திரிகையில் வெளிவரவில்லை, ஆனால் ஃபெமினாவில் இருப்பதாக சிங் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்திய சமுதாயத்தின் முரண்பாடுகளில் ஒன்று என்னவென்றால், சூழ்நிலைகள் கோரப்படும்போது தங்கள் வாழ்க்கையின் சுகங்களை ஒருபோதும் விட்டுவிடாதவர்களால் பெரும்பாலும் கடினமான தியாகங்களின் பலன்கள் அனுபவிக்கப்படுகின்றன.

அவசரகாலத்தை எதிர்த்த போராளிகள் நெருப்பு வழியாக மேற்கொண்ட நடைப்பயணத்தால் சம்பாதித்த அதே பெருமையை தற்போதைய ஊடகங்கள் பெற முயற்சிப்பது, அவர்களின் தியாகங்களை இழிவுபடுத்துகிறது.

அவசரநிலை முடிந்ததும், இந்திரா காந்தி பத்திரிகை சுதந்திரத்திற்காக கண்ணீர் வடிக்கத் தொடங்கினார். ஊடகங்களின் ஒரு விசுவாசமான பிரிவு அவரது குரலை எதிரொலிக்கத் தொடங்கியது. பின்னர் ஒரு வாசகர் மீண்டும் இதைக் குறித்து சோவிடம் கருத்து கேட்ட போது அவர் கூறினார்,

"இப்போது பத்திரிகை சுதந்திரம் போதுமானதாக உள்ளது, அதனால் இந்திரா காந்தி பத்திரிகை சுதந்திரத்திற்கு ஆபத்து பற்றி கத்த முடியும், மேலும் பத்திரிகைகளில் ஒரு பகுதியினர் அதை வெட்கமின்றி முன்னிலைப்படுத்தவும் முடியும்!"

இப்போது இது தானே நடக்கிறது?

Translated From : Swarajya

Tags: media, Indira Gandhi, Emergency, Cho,

Next Story
கதிர் தொகுப்பு
Trending News