Begin typing your search above and press return to search.
மத்திய அரசின் ஆன்லைன் ஏலத்தில் 2.8 லட்சம் டன் கோதுமை விற்பனை - சில்லறை வியாபாரிகளுக்கு பலன்!
ஆன்லைன் ஏலத்தில் 2.87 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
கோதுமை நெல் ஆகியவற்றின் சில்லறை விலையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய தொகுப்பில் உள்ள அப்பொருட்களை மாவுமில்கள் சிறு வியாபாரிகள் போன்ற மொத்த வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசின் இந்திய உணவு கழகம் வாரம் தோறும் ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது.
கடந்த ஜூன் 28ஆம் தேதி விற்பனை தொடங்கியது. நேற்று முன்கினம் 19வது சுற்று ஆன்லைன் ஏலம் நடந்தது. அதில் 2 லட்சத்து 87 ஆயிரம் டன் கோதுமை விற்பனை செய்யப்பட்டதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ஏல விற்பனை நடக்கும். அதுவரை 101 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
SOURCE :DAILY THANTHI
Next Story