3 நாட்களில் 5மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர், ரூ. 1,10,600 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!
By : Sushmitha
லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்புகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதாவது மொத்தம் பத்து நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், ஜம்மு காஷ்மீர், அசாம், அருணாச்சலப் பிரதேசம், உத்திரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய 12 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி நேற்று தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி ரூ. 56,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த பிரதமர் கல்பாக்கம் பாவினி அணுமின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட ஈனுலைக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இன்று மீண்டும் தெலுங்கானா சென்றுள்ள பிரதமர் தெலுங்கானா மாநிலம் சங்கரா ரெட்டி மாவட்டத்தில் ரூபாய் 6800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அடுத்ததாக ஒடிசா, மேற்குவங்கம் என மூன்று நாட்களில் ஐந்து மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தம் ரூபாய் 1,10,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
Source : The Hindu Tamil thisai