Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் அறிமுகம்- மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்!

அடுத்த ஐந்தாண்டுகளில் 3000 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று மதிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் அறிமுகம்- மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்!

KarthigaBy : Karthiga

  |  17 Nov 2023 11:58 AM GMT

மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் பவனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த ஐந்தாண்டுகளில் 3 ஆயிரம் புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், தற்போது இந்திய ரயில்வே ஆண்டுக்கு 800 கோடி பயணிகளை சுமந்து செல்கிறது. இது அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கப்படும். இதற்காக நமக்கு 3000 கூடுதல் ரயில்கள் தேவை.


இது அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பல பயணங்களை மேற்கொள்ளும் என தெரிவித்தார். இதேபோல ரயில்களின் பயண நேரத்தை குறைப்பதும் மற்றொரு இலக்கு என கூறிய அஸ்வினி வைஷ்ணவ் வந்தே பாரத் ரயில்களை அறிமுகம் செய்வதற்கு நேரம் எடுக்கும் என்பதால் தற்போதைய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News