Kathir News
Begin typing your search above and press return to search.

33 ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி ... வைரலாகும் புகைப்படம்!

33 ஆண்டுகளுக்கு முன்பு விவேகானந்தர் மண்டபத்திற்கு வந்த பிரதமர் மோடி ... வைரலாகும் புகைப்படம்!

SushmithaBy : Sushmitha

  |  31 May 2024 8:57 AM GMT

தேர்தல் பரபரப்புகள் அனைத்தும் ஓய்ந்து உள்ள நிலையில் மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகை புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் 48 மணி நேரம் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமாரியில் விவேகானந்தர் மண்டபத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையில் ஏக்தா யாத்திரை என்ற பெயரில் நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொள்ளப்பட்ட யாத்திரை, தமிழகத்தில் கன்னியாகுமாரியில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து துவங்கியுள்ளது.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி யாத்திரை துவங்கும் முன்பு விவேகானந்தர் மண்டபத்தில் முரளி மனோகர் ஜோஷி அவர்களுடன் பிரதமர் மோடி விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News