Kathir News
Begin typing your search above and press return to search.

சூரிய மின்சக்தி உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் செலவில் 34,000 கோடி சேமிப்பு - அசத்தும் மோடி அரசு!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சூரிய சக்தி உற்பத்தியால் எரிபொருள் செலவில் 34,000 கோடியை இந்தியா சேமித்துள்ளது.

சூரிய மின்சக்தி உற்பத்தியால் இந்தியாவின் எரிபொருள் செலவில் 34,000 கோடி சேமிப்பு - அசத்தும் மோடி அரசு!
X

KarthigaBy : Karthiga

  |  11 Nov 2022 12:00 PM IST

எரிசக்தி அமைப்பான 'எம்பர்' ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளில் சூரிய மின் சக்தியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. முதல் 10 நாடுகளில் ஐந்து நாடுகள் ஆசியா கண்டத்தில் உள்ளன. இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் ஆகியவையே அந்த நாடுகள். இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை எரிபொருள் செலவில் மொத்தம் 34 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மேற்கண்ட நாடுகளில் செலவான மொத்த எரிபொருள் செலவில் ஒன்பது சதவீதமாகும்.


இவற்றில் சீனா அதிகமான தொகையை சேமித்துள்ளது. 2,100 கோடி டாலர் எரிபொருள் ச செலவை சேமித்துள்ளது. மின்சார தேவையில் 5 சதவீதம் சூரிய மின்சக்தியால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.அடுத்தபடியாக ஜப்பான் 560 கோடி டாலர் எரிபொருள் செலவை சேமித்துள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. மேற்கண்ட ஆறு மாத காலத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி மூலம் இந்தியா எரிபொருள் செலவில் 4.2 மில்லியன் டாலரை சேமித்துள்ளது. அதாவது ஒரு கோடியே 94 லட்சம் டன் நிலக்கரியின் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே நிலக்கரி தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இதை பயன்படுத்தி இருந்தால் நெருக்கடி அதிகரித்திருக்கும்.வியட்நாம் 170 கோடி டாலர் எரிபொருள் செலவையும், 150 கோடி டாலர் செலவையும், தாய்லாந்து 21 கோடி டாலர் செலவையும், பிலிப்பைன்ஸ் 7 கோடியே 80 லட்சம் டாலர் செலவையும் சேமித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News