Kathir News
Begin typing your search above and press return to search.

விமானப்படை வீரர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிப்பு - ராமநாதபுரத்தில் பரபரப்பு.!

விமானப்படை வீரர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிப்பு - ராமநாதபுரத்தில் பரபரப்பு.!

விமானப்படை வீரர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிப்பு - ராமநாதபுரத்தில் பரபரப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 6:25 AM GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 35 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 65 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 866 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஐஎன்எஸ் பருந்து விமானப்படைத் தளத்தில் இருக்கும் 41 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 35 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று ஒரே நாளில் 90 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News