Kathir News
Begin typing your search above and press return to search.

17 ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர், இந்தியாவில் குறையும் வறுமை எண்ணிக்கை - ஐ.நா அறிக்கை

2005 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 41/2 கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டதாக ஐ.நா கூறியுள்ளது.

17 ஆண்டுகளில் நான்கரை கோடி பேர் வறுமையில் இருந்து விடுபட்டனர், இந்தியாவில் குறையும் வறுமை எண்ணிக்கை - ஐ.நா அறிக்கை

KarthigaBy : Karthiga

  |  18 Oct 2022 7:00 AM GMT

ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டிருப்பதாவது :-

உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடி பேர் அதாவது 19.1% மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களின் பாதிப்பு அதாவது 59 கோடியே 30 லட்சம் பேர் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்தியாவை பொறுத்தவரை 2005- 2006 நிதியாண்டில் இருந்து 2020- 2021 நிதி ஆண்டுக்குள் 41 கோடியே 80 லட்சம் பேர் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.2005-2006 நிதியாண்டில் இருந்து 2015 - 2016 நிதி ஆண்டுக்குள் 27 கோடியே 80 லட்சம் பேரும் 2015 - 2016 நிதி ஆண்டில் இருந்து 2020 - 2021 நிதி ஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றம். 2030 -ம் ஆண்டுக்குள் வறுமையில் வாழும் ஆண் பெண் குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயத்துள்ளது.


இதே ரீதியில் சென்றால் அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானது தான். இந்த முன்னேற்றத்தையும் மீறி 2020 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில் தான் அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள்.அதற்கு அடுத்த இடத்தில் தான் நைஜீரியா உள்ளது. இந்த 22 கோடியை 89 லட்சம் ஏடுகளை குறைப்பது கடினமான பணியாகவே இருக்கும். கொரோனா தாக்கம் எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே அதிகமான ஏழை குழந்தைகள் இருப்பதும் இந்தியாவில் தான். ஒன்பது கோடியே 70 லட்சம் ஏழை குழந்தைகள் உள்ளனர். மற்ற நாடுகளின் அனைத்து வயதினரை சேர்ந்த மொத்த ஏழைகளின் எண்ணிக்கையை விட இது அதிகம். இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தை ஏழை குழந்தையாக உள்ளது. இந்தியாவில் பீகார்,ஜார்கண்ட், உத்தர பிரதேசம், காஷ்மீர், ஆந்திரா, சதீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த ஏழு ஆண்டுகளில் வறுமை குறைந்துள்ளது. இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில் தான் அதிக ஏழைகள் வசிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.! அது போல் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை அதிகமாகவும் ஆண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை குறைவாகவும் உள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News