Begin typing your search above and press return to search.
ஒரு நாள் திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை இதனை கோடியா? - மலைக்க வைக்கும் விவரம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 34 லட்சம் உண்டியல் காணிக்கை ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
By : Mohan Raj
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 4 கோடியே 34 லட்சம் உண்டியல் காணிக்கை ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் குறையவில்லை.
அந்த வகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து தினமும் சராசரியாக 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை ஏழுமலையான் தரிசனம் செய்து வருகின்றனர்.
இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இருந்தாலும் கூட்டம் குறைவதாக தெரியவில்லை நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக நேற்று ஒரே நாளில் 4 கோடியே 34 லட்சம் ஏழுமலையானுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story