Begin typing your search above and press return to search.
இஸ்ரோ சார்பில் ரூபாய் 5 கோடி நிவாரண நிதி உதவி..
இஸ்ரோ சார்பில் ரூபாய் 5 கோடி நிவாரண நிதி உதவி..

By :
உலகம் முழுவதும் பரவிவருகிறது தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்திரவு 21 நாட்கள் விதித்துள்ளது.
இந்நிலையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்கலாம் என தெரிவித்து இருந்தார். மேலும் இதற்கு பல பிரபலங்கள், நடிகர்கள், பெரும் நிறுவனங்கள் உள்பட பலரும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
இதன் இடையே இந்தியாவின் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தன்னுடைய ட்விட்டர் பதிவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகாக பிரதமரின் PM-CARES Fundக்கு இஸ்ரோ சார்பில் தொழிலாளர்களின் ஒருநாள் ஊதியமான ரூபாய் 5 கோடியை நிவாரண நிதியாக வழங்கி உள்ளது.
இவ்வாறு இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
Next Story