Kathir News
Begin typing your search above and press return to search.

சாயல்குடியில் போலீசாரை உருட்டுக்கட்டையால் அடித்த மன்சூர், முகமது உள்ளிட்ட 6 பேர் - பின்னணி என்ன?

சாயல்குடியில் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாயல்குடியில் போலீசாரை உருட்டுக்கட்டையால் அடித்த மன்சூர், முகமது உள்ளிட்ட 6 பேர் - பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2022 1:30 PM GMT

சாயல்குடியில் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாயல்குடி அருகே கடற்கரையில் நள்ளிரவில் மது அருந்தி இளைஞர்களை எச்சரித்த போலீசாரை இளைஞர்கள் தாக்கியதில் போலீசார் காயம் அடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நம்பியூர் அருகே ஐந்து ஏக்கர் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கும்பலாக சிலர் மது அருந்துவதாக சாயல்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து பணியிலிருந்து ஏட்டு காவலர் டூவீலரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஆறு பேரையும் போலீசார் கலைந்து போக சொல்லும்போது அந்த 6 பேரும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் அந்த இடத்தை விட்டு கலைந்து போலீசார் செல்லும்பொழுது அந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் போலீசார் இருவரையும் வழிமறித்து கட்டையால் தாக்கி உள்ளனர். காயமடைந்த போலீசார் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சாயல்குடி போலீசார் நரிப்பையூர் ஐ சேர்ந்த அல் ரஷீத், ஒப்பிலான் பகுதி மன்சூர் அலி கான், முகமது, மன்சூர், முபாரக் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்

மது அருந்தியதை தட்டி கேட்டதால் போலீசாரை உருட்டு கட்டையால் அடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Soure - Hindu Munnani Tweet

Next Story
கதிர் தொகுப்பு
Trending News