Kathir News
Begin typing your search above and press return to search.

7 கிலோமீட்டர் வரிசை, இரண்டு நாட்கள் காத்திருப்பு - திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

7 கிலோமீட்டர் வரிசை, இரண்டு நாட்கள் காத்திருப்பு - திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Mohan RajBy : Mohan Raj

  |  29 May 2022 2:30 PM GMT

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலை மோதுகிறது ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் வரிசை நிற்பதால் திருமலையில் சாமி தரிசனத்திற்கு 2 நாட்கள் ஆகிறது.

கோடை விடுமுறை என்பதாலும் திருப்பதியில் தற்போது ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது

கொரனோ கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்கும் விதிமுறைகள் அதிக அளவில் இருந்து வந்தன. தற்பொழுது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு பக்தர்கள் சுலபமாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு திருப்பதியில் கூட்டம் அலைமோதுகிறது.


பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் முழுமையாக நிறைவடைந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசிக்க 7 கிலோமீட்டர் தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதன் காரணமாக ஒருவர் க்யூவில் நின்று ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என விரும்பினால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஆகும் அவர் சாமி தரிசனம் செய்ய என்ற நிலை உருவாகி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News