Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னையில் ரூ 7 கோடி யானை தந்தம் பறிமுதல் - 7 பேர் அதிரடி கைது!

சென்னையில் ரூபாய் 7 கோடி மதிப்பிலான யானை தந்தம் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டதால் அது பறிமுதல் செய்யப்பட்டு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ரூ 7 கோடி யானை தந்தம் பறிமுதல் -  7 பேர் அதிரடி கைது!

KarthigaBy : Karthiga

  |  6 Jun 2023 12:15 PM GMT

சென்னையில் யானை தந்தம் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக விற்கப்படுவதாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு கும்பல் இதில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. அந்த கும்பலைக் கூண்டோடு பிடிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சென்னையில் சில இடங்களில் மாறுவேடத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.


அப்போது 4.03 கிலோ எடையுள்ள யானை தன்னங்களுடன் ஏழு பேரை மடக்கி பிடித்தனர். அவர்களில் 4 பேர் சென்னையையும் இரண்டு பேர் சேலத்தையும் ஒருவர் கர்நாடகத்தையும் சேர்ந்தவர்கள் ஏழு பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். யானை தந்தங்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூபாய் 7.1 9 கோடியாகும் .


இந்த யானை தந்தங்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது நடிகர் நடிகைகள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் இருந்து திருடப்பட்டதா? என தீவிர விசாரணை நடக்கிறது . மேற்கண்ட தகவலை வருவாய் புலனாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News