Kathir News
Begin typing your search above and press return to search.

ரூ.70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

ரூ.70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  5 Feb 2024 1:53 AM GMT

சாலை, ரயில்வே மற்றும் உயர்கல்வித் துறை தவிர, இயற்கை எரிவாயு, நிலக்கரி, மின் உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய எரிசக்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐஐஎம் சம்பல்பூர் நிறுவனத்தின் மாதிரி மற்றும் புகைப்பட கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார். நிகழ்வில் திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கல்வி, ரயில்வே, சாலைகள், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளில் சுமார் ரூ.70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதால், ஒடிசாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு குறிப்பிடத்தக்க தருணம் என்று கூறினார். ஒடிசாவின் ஏழைப் பிரிவைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள், ஊழியர் சமூகத்தினர் , வணிக உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் இன்றைய வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை அறுவடை செய்வார்கள் என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். இது ஒடிசா இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.


முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் பல தசாப்த கால நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திரு. அத்வானியின் இணையற்ற பங்களிப்புகளையும், பல தசாப்த கால அனுபவத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார். "அத்வானிக்கு பாரத ரத்னாவை வழங்கி கௌரவிப்பதன் மூலம் , நாட்டின் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். எல். கே. அத்வானி தன் மீது காட்டிய அன்பு, வாழ்த்து மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரது நல்வாய்ப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்து மக்கள் சார்பிலும் அவரை வாழ்த்துவதுடன் அவரது நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்தார். ஒடிசாவை கல்வி மற்றும் திறன் மேம்பாட்டின் மையமாக மாற்ற மத்திய அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News