Kathir News
Begin typing your search above and press return to search.

இவங்க இருக்க வரைக்கும் கொரோனா என்ன, அதுக்கும் மேலயே வரும் - ஆப்கானிஸ்தானில் 8 போலியோ தடுப்பு பணியாளர்கள் படுகொலை!

8 polio workers including 4 women killed in Afghanistan, UN issues statement

இவங்க இருக்க வரைக்கும் கொரோனா  என்ன, அதுக்கும் மேலயே வரும் - ஆப்கானிஸ்தானில் 8 போலியோ தடுப்பு பணியாளர்கள் படுகொலை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Feb 2022 4:15 AM GMT

வடக்கு ஆப்கானிஸ்தானில் 4 வெவ்வேறு இடங்களில் 8 போலியோ தடுப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள் சபை இதற்கான அறிக்கையை வெளியிட்டது.

போலியோ சொட்டு மருந்து குழுவைச் சேர்ந்த ஒருவர் தகார் மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 4 பேர் குண்டுஸ் நகரில் கொல்லப்பட்டனர். தவிர, ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள எமாம்சாஹேப் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் மற்றும் 2 தடுப்பூசி போடுபவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்த 8 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. தலிபான் தகவல் மற்றும் கலாச்சாரத் துறைத் தலைவர் (குண்டூஸ்) மதியுல்லா ரோஹானி கூறுகையில், "குண்டூஸ் மாகாணத்தில் இன்று நடந்த சம்பவங்கள் தொடர்பாக எங்கள் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர், மேலும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இந்த தாக்குதல்களின் விளைவாக, 21 பிப்ரவரி 2022 அன்று தொடங்கிய தேசிய போலியோ தடுப்பூசி பிரச்சாரம், குண்டுஸ் மற்றும் தகார் மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைநிறுத்தம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாப்பற்றதாகவும், உயிருக்கு ஆபத்தான நோய்க்கு ஆளாகக்கூடியதாகவும் மாற்றும். இது நிரந்தர பக்கவாதத்தை ஏற்படுத்தும் என WHO பிராந்திய இயக்குனர்டாக்டர் அஹ்மத் அல்-மந்தாரி தெரிவித்தார் .

2021 ஆம் ஆண்டில் தடுப்பூசி பிரச்சாரத்தின் போது ஆப்கானிஸ்தானில் 9 போலியோ தடுப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டனர். உலகில் இன்னும் போலியோ இருக்கும் 2 நாடுகளில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் மட்டுமே உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News