Kathir News
Begin typing your search above and press return to search.

800 குடும்பங்களின் நலனுக்காக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முண்ணனியினர்., காரணம் என்ன ?

800 குடும்பங்களின் நலனுக்காக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட இந்து முண்ணனியினர்., காரணம் என்ன ?

TamilVani BBy : TamilVani B

  |  10 Oct 2021 1:56 AM GMT

திருநெல்வேலி மாவட்டம் பழயகோட்டை பகுதியில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களில் சிலர் தங்கள் நிலங்களை விற்க செல்லும் போது பத்திர பதிவு அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் வசிக்கு இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக என கூறுகின்றனர்.

இந்நிலையில், இதற்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் குற்றால நாதன் மற்றும் இந்து முண்ணனி அமைப்பை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டம் குறித்து அவர்கள் கூறுகையில் இந்த இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என கூறுகின்றனர் ஆனால் அதற்கான ஆவணங்களை தர மறுக்கின்றனர். இதுகுறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Source:The Hindu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News