Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டுக்கு ரூ.9,609 கோடி பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு- மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டுக்கு ₹9,609 கோடி பஞ்சாயத்துகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ரூ.9,609 கோடி பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு- மத்திய அரசு தகவல்

KarthigaBy : Karthiga

  |  15 March 2023 7:00 AM GMT

மாநிலம் வாரியாக பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களை மதிய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மொரேஷ்வர் பாட்டில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுத்து பூர்வமாக தெரிவித்தார். அதன்படி தமிழ்நாட்டுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 969.376 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 14 மற்றும் 15வது நிதி ஆணையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகளுக்காக பஞ்சாயத்துகளுக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், வழங்கப்பட்டுள்ளது.


ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு ரூபாய் 127.49 கோடி கிடைத்துள்ளது. மேலும் 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பஞ்சாயத்துகளை வலுப்படுத்த ரூபாய் ரூ.895 கோடி நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக மந்திரி தெரிவித்துள்ளார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News