Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை - முறையான சிகிச்சை இல்லாததால் பலியான அவலம்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை - முறையான சிகிச்சை இல்லாததால் பலியான அவலம்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Nov 2022 12:34 PM GMT

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் பிறந்து இரண்டு நாட்களான பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநீர் மலையைச் சேர்ந்த ஆஷா என்பவருக்கு கடந்த புதன் கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது இந்நிலையில் குழந்தை நன்றாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்த நிலையில் நேற்று இரவு குழந்தை உயிரிழந்து விட்டதாக தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News