Kathir News
Begin typing your search above and press return to search.

தண்ணீருக்கும், மண் எண்ணெய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உயிரை விட்ட பெண்

ஒரத்தநாடு அருகே தண்ணீர் என நினைத்து மண்ணெண்ணையை குடித்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தண்ணீருக்கும், மண் எண்ணெய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உயிரை விட்ட பெண்

KarthigaBy : Karthiga

  |  2 July 2023 10:15 AM GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் ஆனந்தம். இவருடைய மனைவி பரிசுத்தம், சம்பவத்தன்று இவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தண்ணீர் என நினைத்து வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்துவிட்டார்.


இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட பரிசுத்தத்தை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரிசுத்தம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் . இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News