Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸின் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் கமிஷனில் பா.ஜனதா மனு

கர்நாடக தேர்தலில் சோனியா காந்தியின் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டி காங்கிரசின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தேர்தல் கமிஷனில் பா. ஜனதா மனுஅளித்துள்ளது.

காங்கிரஸின் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் -  தேர்தல் கமிஷனில் பா.ஜனதா மனு
X

KarthigaBy : Karthiga

  |  9 May 2023 10:00 PM IST

கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சமூகத்தில் பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் கர்நாடகாவின் நற்பெயர், இறையாண்மை , ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு யாரும் அச்சுறுத்தல் விடுக்க காங்கிரஸ் அனுமதிக்காது என்று பேசினார். இத்தகவல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டி மத்திய மந்திரி பூவேந்தர் யாதவ் தலைமையிலான பா.ஜனதா குழு தேர்தல் கமிஷனரில் நேற்று மனு கொடுத்தது .


அதில் இந்தியாவின் மிக முக்கியமான உறுப்பு மாநிலம் கர்நாடகா. ஒரு மாநிலத்தின் இறையாண்மையை பாதுகாக்க அழைப்பு விடுப்பது பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக அர்த்தம் .அத்தகைய அழைப்பு ஆபத்தான மிக கொடிய பிரிவுகளை ஏற்படுத்திவிடும். எனவே சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதற்காக காங்கிரஸ் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சோனியா காந்தியின் பேச்சு இடம் பெற்ற காங்கிரஸின் டுவிட்டர் பக்க பதிவையும் பா.ஜனதா சமர்ப்பித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News