லாரி கேபின்களில் ஏ.சி வசதி: வரைவு அறிக்கைக்குமத்திய அரசு ஒப்புதல்
லாரி தொழிலாளர்களுக்கு லாரி கேபின்களில் ஏ.சி வசதி செய்து தரும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
By : Karthiga
போக்குவரத்து துறையில் லாரி டிரைவர்கள் முக்கிய பங்காற்றுவதாக கடந்த மாதம் கூறியிருந்த சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, அவர்களின் பணி சூழல் மற்றும் மனநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதில் முக்கியமாக லாரி கேபின்களில் ஏ.சி வசதி கட்டாயமாக்கப்படும் என அவர் அறிவித்திருந்தார் . இதை தொடர்ந்து லாரி கேபின்களில் ஏ.சி வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கை மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்திருப்பதாக நேற்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் எண் இரண்டு மற்றும் எண் மூன்று லாரிகளின் கேபின்களில் ஏ.சி வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. லாரி டிரைவர்கள் சாலை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் லாரி டிரைவர்களின் செயல் திறனை மேம்படுத்துவதுடன் சோர்வு பிரச்சினை தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
SOURCE:DAILYTH