பள்ளிக்கல்வியில் திறன்களை அங்கீகரிக்க ஆலோசனை - அசத்தும் மத்திய அரசு!
பள்ளிக்கல்வியில் திறன்களுக்கு அங்கீகாரம் அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார்.
By : Karthiga
ஜி - 20 அமைப்பின் கல்வி பணி குழு முதலாவது கூட்டம் , சென்னையில் நடந்தது .இரண்டாவது கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் கடந்த மாதம் நடந்தது . மூன்றாவது கூட்டம் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடக்கிறது .மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
அமைப்பில் கல்வி சார்ந்த பிரச்சினைகளை ஆலோசிப்பது உலகளாவிய மாதிரிகளை நாம் நடைமுறைப்படுத்த உதவும். புதிய தேசிய கல்விக் கொள்கையை புரிதலுடன் அமல்படுத்த முடியும். பள்ளிக்கல்விகள் திறன்களுக்கு அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. எதிர்கால திறன்களை வரையறுப்பதற்கான கட்டமைப்பை உருவாக்க பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை ஒன்று சேர வேண்டும் . திறமைக்கும் பட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டையும் பிரித்து பார்ப்பது அவசியம். திறமைதான் வெல்லும் என்ற எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.