Kathir News
Begin typing your search above and press return to search.

"ஆப்கானிஸ்தானை கட்டமைக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' - தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் !

கவிழ்க்கப்பட்ட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சுதந்திரம் தற்போது பறிபோகுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானை கட்டமைக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் !

G PradeepBy : G Pradeep

  |  18 Aug 2021 12:00 AM GMT

ஆப்கானிஸ்தான் அரசை வீழ்த்திவிட்டு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். ராணுவம் முதல் அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால், என்ன ஆகுமோ? என மக்கள் அச்சப்பட்டுள்ளனர்.

இதனால் காபூலில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். நேற்று அமெரிக்க ராணுவ விமானத்தில் செல்வதற்கு மக்கள் அலைமோதினர். அதில் சிலர் விமானத்தின் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர். அப்போது கீழே விழுந்து மூன்று பேர் பலியானார்கள்.

கவிழ்க்கப்பட்ட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. அந்த சுதந்திரம் தற்போது பறிபோகுமோ? என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்த நிலையில் தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷஹீன் கூறுகையில் ''விமானத்தில் இருந்து மூன்று பேர் விழுந்து உயிரிழக்க அமெரிக்காதான் காரணம். தலிபான்கள் அதற்கு பொறுப்பேற்க முடியாது. ஆப்கானிஸ்தான் மிகவும் ஏழ்மையான நாடு என்பதால் மக்கள் வெளியேற விரும்புகிறார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு. பெண்கள் அரசாங்கத்தில் இணைய வேண்டும்.

நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. எந்த அமைப்பு, ராணுவ அமைப்பிலும் கிடையாது. ஆப்கானிஸ்தானை கட்டமைக்க அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றார்.

Image Source : Hindustan Times

Maaalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News