Kathir News
Begin typing your search above and press return to search.

ஆப்கானிஸ்தான்: ஆளில்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அவர்களின் சட்டத்திற்கு பயந்து பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான்: ஆளில்லா விமானம் மூலம் தீவிரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

ThangaveluBy : Thangavelu

  |  28 Aug 2021 2:41 AM GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அவர்களின் சட்டத்திற்கு பயந்து பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்காக பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தின் வெளியே லட்சக்கணக்கானோர்கள் காத்துக்கிடக்கின்றனர். இவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விமானப்படை விமானம் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த வியாழக்கிழமை விமான நிலையம் நுழைவு வாயிலில் அடுத்தடுத்து இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அமெரிக்க படை உட்பட 90க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்தனர்.

குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காபூல் விமானநிலைய நுழைவு பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறவும் அமெரிக்கா உத்தவிட்டுள்ளது.

Source: Dinakaran

Image Courtesy:The Guardian

https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=701078

Next Story
கதிர் தொகுப்பு
Trending News