Kathir News
Begin typing your search above and press return to search.

மோடியின் ஆட்சிக்குப் பின் கடல்சார் துறையில் இந்தியா ஈர்த்த முதலீடும் மீன்வளமும் மீனவர் நலமும்!

2014- க்கு பின் கடல் சார் துறையில் இந்தியா ரூபாய் 38,500 கோடி முதலீடு ஈர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோடியின் ஆட்சிக்குப் பின் கடல்சார் துறையில் இந்தியா ஈர்த்த முதலீடும் மீன்வளமும் மீனவர் நலமும்!

KarthigaBy : Karthiga

  |  4 March 2024 6:14 AM GMT

கடல் சார் பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என மதிய இணையமைச்சர் முருகன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மாநாடு 2024 சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சி மையவளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் கடல்சார் மீன்வளம் , வணிகம் சார்ந்த 400 பக்கங்கள் கொண்ட ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. மாநாடு இறுதி நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-


இந்திய கடற்கரை 8000 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 2014 ஆம் ஆண்டுக்கு பின் கடல் சார் துறையில் 38,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளது. மீனவர்கள் கடலை பாதுகாக்க முன்வருவதுடன் அதற்கான முயற்சியும் எடுத்துள்ளனர். அந்தமான் கடற்பரப்பில் மீன்வளம் அழிந்து வருகிறது .அங்கு மீன்பிடிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கடல்பாசி வளர்ப்பை ஊக்கப்படுத்த இராமேஸ்வரத்தில் கடல் பாசி பூங்கா அமைத்துள்ளோம் . மீன்பிடி துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி உள்ளோம். டிஜிட்டல் மயமாக்கியதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை வைத்து இத்துறை செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News