"AI இல் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா" பிரான்ஸ் பிரதிநிதி ஜீன் நோயல் பாரோட் புகழாரம்!
By : Sushmitha
கடந்த புதன் கிழமை அன்று டிஜிட்டல் விவகாரங்களுக்கான பிரான்ஸ் பிரதிநிதி ஜீன் நோயல் பாரோட் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை உச்சி மாநாட்டை நடத்துவதில் AI இல் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். மேலும் டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டுறவின் மந்திரி சபையிலும் பங்கேற்கிறார்.
இப்படி அவர் பங்கேற்பதற்கு, இங்கே இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்கும், அடுத்த ஆண்டு AI இன் உலகளாவிய கூட்டாண்மையான GPI க்கு தலைமை தாங்குவதற்கும் இந்தியாவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதோடு இரு நாடுகளும் ஒரே மதிப்புகளைப் பகிர்ந்து கொள்வதால், இந்தியாவும் பிரான்சும் தங்கள் உறவுகளையும் உலகளாவிய நிகழ்ச்சி நிரலையும் கட்டியெழுப்பப் போகிறது என்று வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டிய பாரோட், இரு நாடுகளுக்கும் "சிறந்த உறவுகளில் உள்ளன என்றார். இதனை தொடர்ந்து, பிரெஞ்சு தூதரகம், அமைச்சர் பாரோட் இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமையகத்திற்கும் வருகை தருவார், அங்கு அவர் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பற்றி மேலும் அறிந்து கொள்வார், மேலும் இந்தியாவின் ஆதார் திட்டம் குறித்த செயல்விளக்கமும் அளிக்கப்படுவார்" என்று பாரோட் வெளியிட்ட அறிக்கையை தெரிவித்துள்ளது.
Source : India defence news