Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக நேர்மையான ஆட்சியை தமிழகத்துக்கு தரும் - பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை !

Breaking News.

பாஜக நேர்மையான ஆட்சியை தமிழகத்துக்கு தரும் - பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை !

TamilVani BBy : TamilVani B

  |  15 Sep 2021 4:00 AM GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்த பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

மதுக்கடைகளை மூடுவோம் என்பதே திமுகவின் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை திறந்து உள்ளது. இது மட்டுமின்றி டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு அரசை நடத்துகிறது என கூறினார்.

மேலும், தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது. கடந்த 2020 ஆண்டு மட்டும் தமிழகத்தில் இருந்து நீட் மூலம் 435 மாணவர்கள் மருத்துவம் பயின்றுள்ளனர். அதுவே நீட் இல்லாத போது திமுக ஆட்சியில் 190 மாணவர்கள் மட்டுமே படித்துள்ளனர்.

இதுவரை பொய் வாக்குறுதிகளை கொடுத்தே திமுக ஆட்சிக்கு வந்துள்ளது எனவும் தமிழகத்தில் வளமான மற்றும் நேர்மையான ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் எனவும் கூறியுள்ளார். பாஜக தலைவரின் பேச்சு தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News