பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மேலும் ஒரு சதிச்செயல் அம்பலம்
27ம் தேதி மீண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது பல இடங்களில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
By : Mohan Raj
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் பல மாநிலங்களிலும் செயல்ப்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மட்டுமின்றி இந்த அமைப்பின் துணை அமைப்பு சிலவும் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் மீது பலரும் கலவரங்களை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ சோதனையில் ஈடுப்பட்டது. அதன்பின், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 27ம் தேதி மீண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுப்பட்டது. அப்போது பல இடங்களில் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், பாப்புலர் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோதமான செயல்களில் ஈடுப்படுவதாக அந்த அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் 8 பேரை என். ஐ . ஏ காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் ஈடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்களிடம் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சுமார் 15 பேர் கொண்ட பிஎப்ஐ குழு ஒன்று தமிழ்நாட்டிற்கு வருகை தரும் யூதர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
மேலும், அரசுக்கு எதிராக பல தேசவிரோத செயல்களில் ஈடுபடுதல், இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.